பழனி பஸ்நிலையத்தில் பயணிகள், பக்தர்களின் வசதிக்காக இலவச கழிப்பறை உள்ளது. அதேபோல் நகராட்சி கட்டண கழிப்பறை செயல்படுகிறது. ஆனால் கட்டண கழிப்பறையிலோ, நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். போதாக்குறைக்கு இலவச கழிப்பறைகளையும் அடிக்கடி பூட்டிவிடுகின்றனர். இதனால் அதிக பணம் கொடுத்து கட்டண கழிப்பறைக்கு தான் மக்கள் செல்கின்றனர். கட்டணம் அதிகம் கொடுத்தாலும், அங்கு முறையான பராமரிப்பு இல்லாததால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி பொதுமக்கள், பக்தர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.