விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தின் பின்புற பகுதியில் உள்ள ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?