ஆற்றை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்கள்

Update: 2025-06-29 13:49 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றில் ஏராளமான கருவேல மரங்கள் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் மழை பெய்யும்போது இது ஆற்றில் மழைநீர் செல்ல தடை ஏற்பட்டு அருகில் உள்ள தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது. மேலும் இந்த வாய்க்காலில் கழிவுநீர் வந்து தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்