நோயாளிகள் அவதி

Update: 2025-06-29 12:43 GMT

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. எடுப்பதற்கு ஸ்டெச்சர் மற்றும் வீல் சேர்களில் அந்தந்த பிரிவுகளுக்கு அழைத்து செல்ல பணம் கேட்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் தாமதமாக அழைத்து செல்லும் நிலையம் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.





மேலும் செய்திகள்