பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு மலையடிவாரத்தில் உள்ள பஞ்சநதிக்குளம் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கட்டி முடித்து திறக்கப்பட்ட முடி காணிக்கை மண்டபம் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.