புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் வேங்கை கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு மழை பெய்யும்போது நீர்வரத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறது. குறிப்பாக பாப்பா வயலை ஒட்டி சத்தியமூர்த்தி சிலைக்கு பின்புறம் உள்ள வாய்க்காலில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நீர் இந்த வாய்க்கால் வழியாக வேங்கை கம்மாய்க்கு சென்றடைகிறது. தற்போது இந்த நீர் வரத்து வாய்க்கால் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு காடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் தண்ணீர் செல்ல தடையாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.