குரங்குகள் தொல்லை

Update: 2025-06-29 11:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், பணவயல் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. முதலில் ஒன்று, இரண்டாக வந்த குரங்குகள் தற்போது பெருகி சுமார் 20, 30 என கூட்டமாக வந்து குழந்தைகள், பெண்களை விரட்டுவதும், தாக்கி உணவுப் பொருட்களை பிடுங்குவதும், ஆளில்லா வீடுகளில் புகுந்து உணவுப் பொருட்களை நாசம் செய்வதும், விவசாய பயிர்களை அழிப்பதுமாக நடந்து கொள்கின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்