புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குளமங்கலம் தெற்கு பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்த அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கிளை வாய்க்கால் வழியாக இலுப்பை குளம், பெரியகுளம், பனங்குளம் பெரியகுளம், பாண்டிகுடி, வில்லுனி ஆறு மற்றும் நெய்வத்தலி கோவிலூர் வழியாக நீர் நிரம்பி கடலில் கலக்கிகிறது. இந்த நிலையில் இந்த அணையில் பொருத்தப்பட்டுள்ள 2 மதகுகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீரை அணையில் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மதகுகளை சரிசெய்வதுடன், இப்பகுதியில் உள்ள கரைகளை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.