நாகர்கோவில் மையப்பகுதியான செட்டிகுளம் சந்திப்பில் இருந்து வேப்பமூட்டில் இருந்து வரும் சாலையின் ஓரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கழிவுநீர் ஓடையின் மீது நடைபாதையாக அமைக்கப்பட்டிருந்த சிலாப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து வரும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையை தூர்வாரி அதன் மீது சிலாப்புகள் அமைக்க வேண்டும்.
-வினோத், நாகர்கோவில்.