உத்தமபாளையத்தில் இருந்து புறவழிச்சாலைக்கு செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. மேலும் புறவழிச்சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் விபத்துக்கு காரணமானவர்களை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனவே புறவழிச்சாலையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.