போடி தலைமை தபால் அலுவலகம் அருகே தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் நலனுக்காக ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டது. இந்த ஏ.டி.எம். மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே ஏ.டி.எம். மையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.