மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் 2வது தெருவில் பல மாதங்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இந்த தெருநாய்கள் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்துவதோடு சாலையில் விளையாடிக்கொண்டு இருக்கும் சிறுவர் சிறுமிகளை கடித்து குதறுகின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர் மிகந்த அச்சமடைந்துள்ளனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?