முட்செடிகளை அகற்ற வேண்டும்

Update: 2025-06-22 15:47 GMT
சேத்தியாத்தோப்பு பூதங்குடி முதல் பாறை கொள்ளை வரை வீராணம் ஏரியின் இருகரைகளிலும் முட்செடிகள் மற்றும் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் சுத்தமாக இல்லாமலும், அதிகளவு நீர் தேக்கி வைக்க முடியாமலும் உள்ளது. எனவே ஏரியின் கரையில் இருபுறமும் உள்ள முட்செடிகளை விரைந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்