குரங்குகள் தொல்லை

Update: 2025-06-22 15:16 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துச்சென்று விடுவதுடன் மளிகைப் பொருட்களை சேதப்படுத்திவிட்டு சென்று விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி குழந்தைகளை குரங்குகள் கடிக்க துவத்துவதினால் பெற்றோர் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்