இறைச்சி கழிவுகளால் சுகாதார கேடு

Update: 2025-06-22 14:12 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் அக்னி ஆற்றின் நீர்வழித்தடத்தில் கொட்டப்படுகிறது. இதன் அருகே தாலுகா அலுவலகம், கருவூலம் போன்றவை உள்ளன. குப்பை கழிவுகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நீர்வழித்தடத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு சுகாதார சீர்கேடு எற்பட்டு வருகிறது. எனவே நீர்நிலை பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டுவதை பேரூராட்சி நிர்வாகிகள் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்