விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளம் பஞ்சாயத்து உட்பட்ட கண்ணக்குடும்பன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியின் அருகே கிராம இ சேவை கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.. இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் சேதமடைந்த கட்டிடத்தை சுற்றி விளையாடுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்படட்ட அதிகாரிகள் மேற்கண்ட கட்டிடத்தை ஆய்வு செய்து சீரமைத்து தருவார்களா?