கடையம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த ரெயில்வே நிலையம் குறித்த வழிகாட்டி பலகை கீழே விழுந்து பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் வெளியூர் பயணிகள் ரெயில் நிலையத்திற்கு செல்வதற்கு வழி தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த வழிகாட்டி பலகையை சரிசெய்து உரிய இடத்தில் அமைப்பதற்கு அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டுகிறேன்.