கோவில்பட்டி- கடலையூர் சாலையில் குடிநீர் குழாய் வால்வு தொட்டி திறந்த நிலையில் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்கிறவர்கள் குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்குள் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.