சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ளா அகஸ்தியர் தெரு, கம்பர்தெரு. பாரதி தெரு ஆகிய தெருக்களில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலைகளில் தெருநாய்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. தெருநாய்கள் சாலைகளில் ஆபத்தான முறையில் அங்கும், இங்கும் செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்லும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.