மரக்கிளைகள் அகற்றப்படுமா?

Update: 2025-06-22 11:38 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம சாலைகளில் தாழ்வான நிலையில் செல்லும் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை களைய வேண்டும். இதனால் தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் சொகுசு பஸ் மற்றும் கனரக வாகனங்களின் மீது மரம் மற்றும் மரக்கிளை உரசி கண்ணாடி மற்றும் வாகனங்களில் சிராய்ப்பு ஏற்படுவதோடு, கால்நடை தீவனமான வைக்கோல் ஏற்றி வரும் விவசாயிகள் முதல் வியாபாரிகள் வரை அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்