அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள்

Update: 2025-06-22 11:37 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், எரகுடி கிராமத்தில் அரசு வழங்கிய ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பல தெருக்களுக்கு மின் விளக்கு வசதி, சாலை வசதி, பொது கழிப்பிட வசதி முதலான அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரப்படாமல் உள்ளது. மேலும் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் நுழைவு பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் பொது குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்