முத்துப்பேட்டையை அடுத்த குன்னலூர் கிராமத்தில் மாரியாறு உள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலத்தில் மாரியாறு வாய்க்கால் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மாரியாறு முறையான பராமரிப்பின்றி ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர்மண்டி இருக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மாரியாற்றில் தண்ணீர் வழிந்தோடி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாரியாற்றை தூர்வாரி ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.