அந்தியூர் பஸ் நிலையம் முதல் அரசு ஆஸ்பத்திரி வரையும், பருவாச்சி பகுதியில் இருந்து தவுட்டுப்பாளையம் வரையும் வைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் போது தடுப்புச்சுவர்கள் இருப்பது தெரியாமல் அவற்றின் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?