ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருந்த போதிலும் கரை ஓரங்களிலும், பரிசல் துறையில் பரிசல்கள் நிறுத்த வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் ஒருசிலர் இயற்கை உபாதைகளை கழிப்பதாலும், மீன் கழிவுகளை வீசி செல்வதாலும் துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. இதனை அதிகாரிகள் முறையாக கவனிக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
-மணிமேகலை, பென்னாகரம்.