தெருநாய்கள் தொல்லை

Update: 2025-06-15 17:05 GMT

மகராஜகடை சாலை, முருகன் கோவில் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. அந்த பகுதியில் உள்ள இறைச்சி கடைகளின் அருகிலேயே சுற்ற கூடிய இந்த நாய்கள் சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அவ்வாறு வாரந்தோறும் 2 முதல் 3 பேர் வரை விபத்தில் சிக்கி காயம் அடைகிறார்கள். மேலும் ெதருநாய் கடியாலும் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஷாஜகான், பழையபேட்டை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

மயான வசதி