மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பட்டூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் முற்றிலுமாக சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?