பயன்பாட்டிற்கு வராத கட்டிடம்

Update: 2025-06-15 16:14 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளையம் ஊராட்சியில் தற்காலிகமாக பழைய ஊராட்சி அலுவலகத்தில் இயங்கி வரும் ஊர் புற நூலகத்திற்காக புதிதாக சந்தை பகுதியில் கட்டப்பட்ட ஊர் புற நூலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும், கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி உள்ளது. மேலும் இவ்ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் வழங்கல் மேம்பாட்டிற்காக 2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், சாவடி பகுதியிலும், பழைய ஊராட்சி அலுவலக பகுதியிலும் நிறுவப்பட்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டி கிடக்கிது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

மயான வசதி