புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை ஆசிரியர் இல்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதனால் மாணவ- மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளியில் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி தலைமை ஆசிரியர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.