கங்கைகொண்டான் சிப்காட் நுழைவுவாயில் அருகில் நெல்லை-மதுைர நான்குவழிச்சாலையின் மேற்கு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகள் பஸ் ஏறி செல்கின்றனர். அங்கு நிழற்கூடம் அமைக்கப்படாததால் பயணிகள் வெயில், மழையில் காத்து கிடந்து அவதிப்படுகின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.