சென்னை பள்ளிக்கரணை குளம் தூர்வாரப்படாமல் செடி,கொடிகள் வளர்ந்து பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றமும் வீசுகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.