மாற்றுத்திறனாளிகள் அவதி

Update: 2025-06-08 17:40 GMT

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகம் மேல் தளத்தில் அமைந்துள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பதற்கும், விண்ணப்பிக்கவும் பல முறை வட்ட வழங்கல் அலுவலகம் வர வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி வட்ட வழங்கல் அலுவலகம் தரைதளத்தில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அருண், குமாரபாளையம்.

மேலும் செய்திகள்