கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடை முன்பு நாள்தோறும் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகள் நடைபெறாத வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
-முரளி, கிருஷ்ணகிரி.