திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் கோழி இறைச்சி கழிவுகள் சாலையில் வீசப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இறைச்சி கழிவுகளை சாலையில் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.