திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை சில நாய்கள் துரத்தி சென்று அச்சுறுத்துவதோடு விபத்துகளை ஏற்படுத்தி செல்கின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.