சங்கராபுரம் பஸ்நிலையம் நுழைவாயில் அருகே சாலையை ஆக்கிரமித்து சிறு சிறு காய்கறி கடைகள் உள்ளதால் நுழைவாயிலில் பஸ் திரும்பும்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பஸ்நிலையம் நுழைவாயில் அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.