கண்டாச்சிபுரம் தாலுகா அரகண்டநல்லூரில் நாளுக்கு நாள் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. இவ்வாறு விற்கப்படும் லாட்டரி சீட்டுகளால் பொதுமக்களின் பொருளாதார இழப்பு அதிகம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.