கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கூடலூர் நகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த பகுதியில் இருந்து கெவிப்பாரா, காமராஜ் நகர் வரை சாலையோரம் உள்ள தெரு விளக்குகள் அடிக்கடி ஒளிராமல் உள்ளது. இதனால் சாலை பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதன் காரணமாக காட்டு யானைகள் அச்சுறுத்தல் உள்ள இடங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே தெருவிளக்குகள் முறையாக ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.