மதுரை நகர் காளவாசல் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள சாலைகளில் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தியும், குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டியும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் அச்சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நடந்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையை சுத்தம் செய்து தர விரைந்து நடவடிக்கை எடுப்பாார்களா?