சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்

Update: 2026-06-28 13:46 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் ரெயில்வே கேட் வழியாக தினசரி ஏராளமான ரெயில்களும், பஸ், லாரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்களும் கடந்து செல்கின்றன. ரெயில்கள் வரும்போது நீண்ட நேரத்திற்கு முன்பே கேட் மூடப்படுவதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் ரெயில்வே இரும்புப் பாதையின் அடியில் வாகனங்கள் சென்று வர ஏதுவாக சுரங்கப்பாதை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்