கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் பல இடங்களில் ஆபத்தான வளைவுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இருந்து அருகில் உள்ள பள்ளத்தாக்குகளில் கவிழ்ந்து விடுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே ஓவேலி பகுதியில் ஆபத்தான இடங்களில் சாலையோரம் தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.