விக்கிரவாண்டி அருகே பனிமலை கிராமத்தில் மலைமேல் அமைந்துள்ள தாளகிறீஸ்வரர் கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வரும் இந்த கோவிலுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
