நிரந்திர தீர்வு வேண்டும்

Update: 2025-06-08 14:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பெரமனூர் கிராமம் குளக்கரை தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சிறிது மழை பெய்தாலே மழைநீர் சாலையில் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவியர் மிகவும் அவதி அடைகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக இதே பிரச்சினை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பகுதி மக்களுக்கு நிரந்திர தீர்வு கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்