செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ரெயில் நிலையத்தை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறனர். இங்கு உள்ள 7-வது நடைமேடையில் வந்துசெல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். ஆனால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த ரெயில்வே போலீசார் அங்கு பணிக்காக நிறுத்தப்படுவதில்லை. இதனால் பயணிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. எனவே, ரெயில்வே நிர்வாகம் இதை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.