சென்னை சைதாப்பேட்டை, வெங்கடாபுரம் குடிசைமாற்று குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் குழாயை அந்த பகுதியில் உள்ள குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் குழாய் உள்ள பகுதியில் கழிவுநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் அதனை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.