ஆபத்தான பள்ளம்

Update: 2025-06-08 14:29 GMT

சென்னை போரூர், ஆற்காடு சாலையை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தசாலையில் போரூர் சிக்னல் அருகே மாநகராட்சி பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது, அந்த பள்ளம் அருகில் எந்த ஒரு தடுப்பும் அமைக்கப்படாமலும், பள்ளம் மூடப்படாமலும் உள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதோடு, வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்