தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டையில் இருந்து கூட்டாம்புளி செல்லும் வழியில் செல்வபாக்கியம் நகர் பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. மேலும் அங்கு முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் சமூக விரோதிகள் அங்கு மதுபான பாட்டில்களை போட்டுவிட்டு செல்கின்றனர். மேலும் விஷப்பூச்சிகள் நடமாட்டமும் உள்ளது. எனவே அந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கவும், முட்செடிகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.