கடையம் அருகே பொட்டல்புதூர் அரசு பள்ளி அருகில் சாலையில் உள்ள வேகத்தடைக்கு வெள்ளைநிற வர்ணம் பூசப்படவில்லை என்று திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு வேகத்தடைக்கு வெள்ளைநிற வர்ணம் பூசப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.