பூட்டப்பட்ட சுகாதார வளாகம்

Update: 2025-06-08 09:46 GMT

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி எதிரே இப்பகுதி பெண்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த சுகாதார வளாகத்தில் இருந்து தண்ணீர் செல்லும் பிளாஸ்டிக் குழாயில் அடைப்பு மற்றும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவற்றை பராமரிக்காமல் பூட்டிவிட்டனர். இதனால் இப்பகுதியில் உள்ள பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்