பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் அருகில் எரிக்கரை அருகே சிலர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பகல் மற்றும் இரவு நேரத்தில் அவற்றை இளைஞர்கள் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கி அருந்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் மதுபோதையில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.