கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி முத்தனூரில் கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு தரை கழிவறை வளாகம் கட்டப்பட்டது. இந்த கழிவறையை முத்தனூர் பகுதிகளை சேர்ந்த பெண்கள் உபயோகித்து வந்தனர். இந்நிலையில் 60 ஆண்டுகள் ஆனதன் காரணமாக இந்த கழிவறை வளாகம் மிகவும் பழுதடைந்தது. இதனால் கருங்கல்லாலான சுற்று சுவர் மிகவும் பழுது அடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது. இதன் காரணமாக இந்த கழிவறை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் பொது சுகாதார கழிவறை இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.